Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள்- அத்திவரதரை தரிசிக்க நேரம் நீட்டிப்பு

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (17:56 IST)
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் மக்கள் நாள்தோறும் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் பயங்கரமான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசன் ஆகஸ்டு 17 வரை நடைபெறுகிறது. அத்திவரதரை தரிசிக்க அதிகாலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிறகு பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரையிலும் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கட்டுக்கடங்காதா கூட்டமாய் மக்கள் அத்திவரதரை தரிசிக்க வந்தனர். 12 மணிக்கு நடை சாத்தப்பட்டாலும் வரிசையிலேயே 3 மணி வரைக்கும் நிற்கிறார்கள். மேலும் பல மாநிலங்களிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி மக்கள் வந்தபடி உள்ளனர்.

இதனால் இன்று முதல் அத்திவரதர் தரிசனம் அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 9 மணிவரை தொடர்ந்து நடைபெறும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னைய்யா அறிவித்துள்ளார். இதனால் மக்கள் எந்தவித தடைகளுமின்றி அத்திவரதரை மகிழ்ச்சியோடு தரிசித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments