Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கப்படைகள் – ட்ரம்ப் டிவீட்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (09:14 IST)
சிரியாவில் ஐ,எஸ் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்ட அமெரிக்க ராணுவம் விரைவில் நாடு திரும்ப இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புத் தலைதூக்க தொடங்கியது. மெல்ல மெல்ல அதிகமான அவர்களின் ஆதிக்கம் ஒரு கட்டத்தில் சிரியாவின் ஒரு சிலப் பகுதிகளைக் கைப்பற்றி அங்கு இணை அரசங்கம் நடத்துமளவுக்கு முன்னேறினர். அங்குள்ள மக்கள் மீது சர்வாதிகார ஆட்சியை நடத்துகின்றனர்.

இந்த தீவிரவாதிகளை அழித்து ஒழிக்க சிரிய அரசு மற்றும் அந்த நாட்டு மற்றொருப் போராளிக் குழுவான குர்துப் போராளிகளோடு இணைந்து அமெரிக்க ராணுவமும் சிரியாவுக்கு அனுப்பப்பட்டது. சில ஆண்டுகளாக அங்கு தீவிரவாதிகளுக்கும் அமெரிக்க ரானுவத்துக்கும் சண்டை நடந்து வந்தது. இதையடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அங்குள்ள தீவிரவாதிகளை முழுமையாக அழித்து விட்டதாகவும் அதனால் அங்குள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் அமெரிக்காவுக்கு திரும்ப இருக்கிறார்கள் என அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments