Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை வழிபாட்டு தலங்களில் மீண்டும் தாக்குதல்! அமெரிக்கா எச்சரிக்கை

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (20:49 IST)
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று கிறிஸ்துவர்களின் வழிபாட்டுத்தலங்களான தேவாலயங்களில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் இன்னும் அங்கு இயல்பு நிலை திரும்பவில்லை. மீண்டும் இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் இருப்பதால் தினசரி இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது
 
இந்த நிலையில் இலங்கையில் உள்ள வழிபாட்டு தலங்களை குறிவைத்து மீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதன்காரணமக  இலங்கையில் நாளை முதல் 28ம் தேதி வரை பொது இடங்களில் அதிகமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது
 
இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு கடற்கரை முத்துவாரம் பகுதியில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு, சிறப்பு அதிரடிப்படை மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  து செய்யப்பட்டவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள், 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments