Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் அமெரிக்கா: பாதுகாப்பு உதவிகள் நிறுத்தம்!!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (15:16 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் பாகிஸ்தான் அரசை கடுமையாக சாடினார். பாகிஸ்தானில் இயங்கி வருகிற ஹக்கானி வலைச்சமூகம், அல்கொய்தா, தலீபான் உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்கள் மீது அந்நாட்டின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. 
 
இதனால் அமெரிக்கா கடும் அதிருப்தியில் உள்ளது. மேலும், தீவிரவாதிகளை ஒழிப்பதாக பொய் சொல்லி ஏமாற்றி அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் கடந்த 15 ஆண்டுகளாக ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதி பெற்றுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
 
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்த பிறகே பாதுகாப்பு உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments