இது வெறும் டீசர் தான்.. டிக்டாக்-கிற்கு மூடு விழா நடத்திய அமெரிக்கா!

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (12:25 IST)
சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்திய அரசு அதிரடியாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது. இந்தியாவில் மிக அதிகமானோர் உபயோகப்படுத்தி வந்த டிக்டாக், ஹலோ ஆகிய செயலிகளும் இதில் அடங்கும்.
 
ஏற்கெனவே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து 59 செயலிகளும் நீக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே உபயோகத்தில் இருந்த செயலிகளையும் நெட்வொர்க் நிறுவனக்கள் மூலமாக மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில் டிக்டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகின.  
 
தற்போதைய தகவலின் படி, அமெரிக்காவின் ஃபெடரல் ஊழியர்கள் சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை அரசு வழங்கிய சாதனங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவு அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. 
 
பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி ரிவார்டு புள்ளிகளை பணமாக்கி கொள்ளலாம்.. டிஜிட்டல் பேமெண்ட்டில் புதிய புரட்சி செய்யும் செயலி..!!

ஒரே இரவில் கோடீஸ்வரர்: பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ. 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி! மறுநாளே வேலைக்கு சென்ற அதிசயம்..!

வெளிநாட்டுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா? ரூ.60 கோடி கட்டிவிட்டு செல்லுங்கள்.. ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம் உத்தரவு..!

25 நிமிடத்தில் ரூ.5 கோடி கடன் கிடைக்கும்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைவர் அறிவிப்பு..!

அயோத்தியில் 26 லட்சம் அகல் விளக்குகளை ஏற்ற திட்டம்.. கின்னஸ் சாதனை நடக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments