Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை வெளியேற்றிய அமெரிக்கா? ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள்? பரபரப்பு தகவல்!

Prasanth Karthick
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (12:36 IST)

அமெரிக்காவின் குடியேற்ற முறையில் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள கடும் சட்டங்கள் காரணமாக இந்தியர்கள் ராணுவ விமானத்தில் வெளியேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நிலையில் அமெரிக்க குடியுரிமை சட்டத்தில் கடும் விதிகளை பின்பற்ற தொடங்கியுள்ளார். அதன்படி அமெரிக்காவில் உள்ள 18 ஆயிரம் குடியுரிமை இல்லாத இந்தியர்களை மீண்டும் இந்தியாவுக்கே திரும்ப அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக கொலம்பியாவை சேர்ந்த நபர்களை இப்படியாக ட்ரம்ப் அரசு விமானத்தில் ஏற்றி கொலம்பியாவிற்கே அனுப்பி வைத்தது. இந்நிலையில் தற்போது இந்தியர்களும் அவ்வாறு வெளியேற்றப்பட்டு அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியா அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

ராய்டர்ஸ் பத்திரிக்கைக்கு அமெரிக்க விமானப்படை அதிகாரி தெரிவித்த தகவலில் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு அமெரிக்க ராணுவ விமான இந்தியா புறப்பட்டுள்ளதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுதவிர எங்கே எப்போது புறப்பட்டது? இந்தியாவிற்கு எப்போது வருகிறது? என்ற எந்த தகவலும் அதில் இடம்பெறவில்லை. எனினும் இந்த தகவல் வேகமாக பரவி வரும் நிலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments