Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பீதி… ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமிக்கும் அமேசான் !

Webdunia
புதன், 18 மார்ச் 2020 (10:36 IST)
கொரோனா வைரஸ் பீதி காரணமாக மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிகமாக ஈடுபடுவதால் அமேசான் ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது.

சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. ஆம், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 தொட்டுள்ளது. மேலும் 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் வீட்டுக்குத் தேவையானப் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக வாங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அமேசான் நிறுவனம் தற்போது ஒரு லட்சம் பேரை வேலைக்கு நியமித்துள்ளது. மேலும் ஒரு மணிநேர சம்பளமாக 15 டாலருக்கு 17 டாலராக உயர்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments