Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமனில் வான்வெளி தாக்குதல்; அப்பாவி பொதுமக்கள் 25 பேர் பலி

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (10:44 IST)
சவுதி அரேபியாவில் கூட்டுப் படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது.
 
ஏமன் நாட்டின் அதிபரான அப்துல்லா சால்வின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில், அந்நாட்டிலுள்ள ஹவுத்தி இன மக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அமெரிக்காவோடு இணைந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படையும் வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 
 
இந்நிலையில், ஏமன் நாட்டு மேற்கு பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வாழும் பகுதியின் மீது சவுதி அரேபிய கூட்டுப்படையினர் நேற்று நடத்திய வான்வெளி தாக்குதலில், அப்பகுதியில் வசித்து வந்த குழந்தைகள் உள்பட 25-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியே சோகமயமாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments