Webdunia - Bharat's app for daily news and videos

Install App

47 ஆண்டுகளுக்கு முன் பாய்பிரண்ட் கொடுத்த மோதிரத்தை கண்டுபிடித்த பெண்

Webdunia
புதன், 19 பிப்ரவரி 2020 (20:40 IST)
47 ஆண்டுகளுக்கு முன் பாய்பிரண்ட் கொடுத்த மோதிரத்தை கண்டுபிடித்த பெண்
கடந்த 1973-ஆம் ஆண்டு தனது ஆண் நண்பர் ஒருவர் கொடுத்த மோதிரம் எதிர்பாராதவிதமாக தொலைந்து விட்டதாகவும் அந்த மோதிரம் தற்போது 47 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ளதாகவும் பெண் ஒருவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
63 வயதான மூதாட்டி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய போது தனது ஆண் நண்பர் கடந்த 1973-ஆம் ஆண்டு பள்ளியில் படிக்கும்போது ஒரு மோதிரம் கொடுத்ததாகவும் அந்த மோதிரத்தை கைகழுவும்போது கழற்றி வைத்ததாகவும் அப்போது அந்த மோதிரம் தொலைந்து விட்டதாகவும் அதன்பின்னர் அவர் பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை என்றும் கூறினார்
 
ஆண் நண்பர் ஆசையாக கொடுத்த மோதிரம் தொலைந்து விட்டாலும் அவரையே திருமணம் செய்து கொண்டதாகவும்,சமீபத்தில்தான் தனது கணவர் இறந்து விட்டதாகவும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த மோதிரம் தற்போது கிடைத்துள்ளது என்றும் காடு ஒன்றில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது இந்த மோதிரம் கிடைத்ததாகவும் அதில் தனது பள்ளியின் பெயர் பட்டமளிப்பு ஆண்டுகள் பல குறிப்புகள் இருப்பதாகவும் அந்த மோதிரத்தை எடுத்து காண்பித்துள்ளார். இந்த மோதிரம் தனக்கு கிடைத்தது தனது கணவரே மீண்டும் கிடைத்தது போல் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments