Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புற்று நோயால் மரணமடைந்தார் அப்ரிடியின் மகள்: சமூக வலை தளங்களில் பரவும் வதந்தி

புற்று நோயால் மரணமடைந்தார் அப்ரிடியின் மகள்: சமூக வலை தளங்களில் பரவும் வதந்தி
, வியாழன், 28 ஏப்ரல் 2016 (12:11 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர் அப்ரிடி. இவரது இரண்டாவது மகள் புற்று நோய் காரணமாக இறந்துவிட்டதாக சமுக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் ஒன்று வெளியானது.


 
 
இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் அதனை பரப்பி வந்தனர். உண்மையில் அவரது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் அவள் நலமாக உள்ளார். சில தினங்களுக்கு முன் அப்ரிடி தனது மகளுடன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மகள் விரைவில் குணமடைய வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

webdunia

 
 
இதனை பயன்படுத்தி வதந்தியாளர்கள் அப்ரிடியின் மகள் இறந்ததை போல் புகைப்படத்தை உருவாக்கி பரப்பி விட்டுள்ளனர். சிறுமி ஒருவரின் புகைப்படமும் அதனுடன், இறந்த நிலையில் ரோஜா பூ தூவி இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் அப்ரிடியின் மகள் இறந்து விட்டார், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலாளிக்கு ஆரஞ்சு ஜூஸில் தனது சிறுநீரையும் கலந்து கொடுத்த வேலைக்கார பெண்- வீடியோ