Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாட்டரி பரிசை அறிவிக்க போன் செய்த நிர்வாகம்.. 11 மிஸ்டு கால்.. அதன்பின் நடந்தது என்ன?

Advertiesment
Lottery

Mahendran

, திங்கள், 2 ஜூன் 2025 (15:16 IST)
அபுதாபியை சேர்ந்த ஒருவருக்கு லாட்டரி பரிசு விழுந்தது. அதையடுத்து அந்த பரிசை அறிவிக்க, லாட்டரி நிர்வாகம் அவரை பலமுறை தொடர்பு கொண்டது. ஆனால் அவர் போன் எடுக்காததால், மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அபுதாபியை சேர்ந்த இந்தியர்  சஞ்சீவி என்பவர், சமீபத்தில் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கிய நிலையில், அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு ஒரு பெரிய தொகை பரிசாக விழுந்துள்ளது. ஆனால், லாட்டரி நிர்வாகம் பலமுறை தொலைபேசி மற்றும் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை. 11 மிஸ்டு கால்கள் சென்றதாக கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து, அவரை மின்னஞ்சல் மூலமாக லாட்டரி நிர்வாகம் தொடர்பு கொண்ட போது தான், சஞ்சீவி தனக்கு பரிசு விழுந்தது என்பதை அறிந்து உடனடியாக லாட்டரி நிர்வாகத்திடம் நேரில் சென்றார். அப்போது, டிக்கெட் வாங்கும் போது தவறான செல்போன் எண்ணை அவர் பதிவு செய்திருந்ததால், அவருடைய அழைப்பை ஏற்க முடியவில்லை என்பது தெரிய வந்தது.
 
இன்னும் சில நாட்கள் ஆகி இருந்தால், அந்த பரிசு காலாவதியாகி இருக்கும் என்ற நிலையில், சஞ்சீவி அந்த பரிசை பெற்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு.. என்ன ஆச்சு?