Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டென்மார்க் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! 3 பேர் பலி!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (09:51 IST)
டென்மார்க் வணிக வளாகம் ஒன்றில் இளைஞர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகனில் விமான நிலையம் அருகே வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் வழக்கத்தை விட அதிகமான மக்கள் அந்த வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்து வந்துள்ளனர்.

அப்போது வணிக வளாகத்திற்குள் புகுந்த 24 வயது இளைஞர் திடீரென துப்பாக்கியை எடுத்து அங்குள்ளவர்களை சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் நாலாபுறமும் அலறியடித்து ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த இளைஞரை வளைத்து பிடித்து கைது செய்த போலீஸார் இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments