Publish Date: Tue, 03 Apr 2018 (12:41 IST)
Updated Date: Tue, 03 Apr 2018 (12:47 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் மூளை ஆபரேசன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது புல்லாங்குழல் வாசித்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அமெரிக்காவின் டெக்காஸ் பகுதியை சேர்ந்தவர் அன்னா ஹென்றி(63). புல்லாங்குழல் இசைக்கலைஞரான இவருக்கு மூளையில் கட்டி இருந்தது. ஆபரேஷன் மூலம் கட்டியை அகற்ற முடிவு செய்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அன்னா ஹென்றி படுக்கையில் இருந்தபடி புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சையின் போது, மூளையை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்வது ஒருவகை சிகிச்சை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.