Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடிக்கணக்கான கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்: சமூக வலைத்தளத்தில் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (15:42 IST)
அமெரிக்காவில் கோடிக்கணக்கான பயனாளர்களின் கிரெடிட் கார்டுகள் தொடர்பான விவரங்களை திருடிய ஒரு பெண், அது குறித்து சமூக வலைத்தளங்களில் பெருமையாக பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான பெய்ஜ் தாம்சன் என்ற பெண்மணி, தனது ”ஹேக்கிங்” திறனை பயன்படுத்தி, அமெரிக்காவின் கேப்பிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்கள் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். மேலும் இதனை குறித்து சமூக வலைத்தளங்களிலும் பெருமையாக பகிர்ந்துள்ளார்.

பெய்ஜ் தாம்சனின் அந்த பதிவு இணையம் முழுவதும் வைரல் ஆனது. இந்த பதிவை கவனித்த ஒரு இணையதளவாசி, கேப்பிடல் ஒன் வங்கிக்கு இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு கிரெடிட் கார்டு விவரங்களை திருடிய தாம்சனை எஃப்.பி.ஐ கைது செய்து, திருடிவைத்த விவரங்களையும் மீட்டுள்ளது.

ஆனால் பெய்ஜ் தாம்சன், கிரெடிட் கார்டு தகவல்களை திருடி, நிதிமோசடியில் ஈடுபடாததால், தகவல் திருட்டுக்காக 5 ஆண்டு சிறையும், 2 லட்சம் டாலர் வரையிலான அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் பாதுகாப்பாக இயங்ககூடிய வங்கிகளில் கேப்பிடல் ஒன் வங்கியும் ஒன்று. அப்படிப்பட்ட வங்கியின் பயனாளர்களில் 10 கோடி பேரின் கிரெடிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டது வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments