Publish Date: Sat, 12 Jan 2019 (15:37 IST)
Updated Date: Sat, 12 Jan 2019 (15:40 IST)
அமெரிக்காவில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் ரோச்சஸ்டர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் கேத்ரின் மேரி(26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். மேரி பள்ளியில் படிக்கும் 16, 17 வயது மாணவர்களுடம் எப்போதும் நெருக்கமாக இருந்துள்ளார்.
மேரியின் நடவடிக்கைகளில் சந்தேகித்த பள்ளி நிர்வாகம், மாணவர்களிடம் விசாரித்ததில் மேரி மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.