Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்ற தாயை புல்லை சாப்பிடச் சொல்லி கொடுமை படுத்திய மகன்

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (10:31 IST)
சீனாவில் மூதாட்டி ஒருவரின் மகன், தன் மனைவியுடன் சேர்ந்து பெற்ற தாயை புல்லை சாப்பிடுமாறு கொடுமைபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் டோங்ஜிய  என்ற கிராமத்தில், லியாங் என்ற நபர் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். வீட்டில் அவ்வப்போது மாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது.
 
சம்பவ தினத்தன்றும் இருவருக்கு எதோ பிரச்சனை நடந்துள்ளது. இதனை லியாங் வீட்டிற்கு வந்த உடனே அவரது மனைவி பத்த வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லியாங், தனது தாயை அடித்து உதைத்து புல்லை சாப்பிடுமாறு துன்புறுத்தியுள்ளார். இதற்கு இவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். 
 
எதிர் வீட்டில் இருந்த நபர் இந்த காட்சிகள் அனைத்தையும் வீடியோவாக எடுத்து இணையத்தில் பரவவிட்டார். இந்த காட்சிகள் வைரலாகி பலரது கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. போலீஸாரும் அந்த நபரை கூப்பிட்டு எச்சரித்தனர். கஷ்டப்பட்டு வளர்க்கும் பெற்றோரை இப்படி செய்யும் பிள்ளைகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments