Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாயின் பிணத்துடன் வசித்த நபர்: பென்சன் பணத்திற்காக செய்த கொடூரம்

தாயின் பிணத்துடன் வசித்த நபர்: பென்சன் பணத்திற்காக செய்த கொடூரம்
, வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:01 IST)
ஸ்பெயினில் பென்சன் பணத்திற்காக இறந்த தாயின் பிணத்துடன் மகன் ஒரு வருட காலம் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்பெயினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வீட்டில்  உருக்குலைந்த  நிலையில் உள்ள பெண்ணின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீஸார் அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதையடுத்து போலீஸார் அந்த பெண்மணியின் மகனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அதில் தாய் இறந்து ஒரு வருடமாகியும் அவரது பென்சன் பணத்திற்காக தாயாரின் மறைவு குறித்து யாருக்கும் தெரிவிக்காமல், உடலை வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளான். போலீஸார் அந்த கொடூரனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருடன் எனக் கூறுவதா ? – மல்லையாவுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர்