Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே தொடர் தாக்குதல்...போர் மூளும் அபாயம்

Webdunia
புதன், 10 மே 2023 (19:07 IST)
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம்   நேற்று  நடத்திய தாக்குதலில்  பாலஸ்தீன முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட  15  பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே  நீண்டகாலமாக பகை நிலவி வரும் நிலையில், அவ்வப்போது போரிட்டு வருகிறது.

கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட  நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து , இஸ்ரேல் நாட்டை நோக்கி  ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் படையினர்   காரணமின்றி தன்னை கைது செய்யப்பட்டதாக கூறி காதர் அட்னன் 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இஸ்ரேல் மீது பாலஸ்தீன படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில்  15  பேர் பலியாகினர்.

இதுகுறித்து, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் என்ற இயக்கம் கூறியதாவது: இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் தங்கள் 3 தலைவர்கள் ஜிகாத் அல் கன்னம், கலீல் அல்ம் பாதினி மற்றும் டாரிக் இஜ் அல் தீன் ஆகிய 3 பேர், அவர்களின் மனைவிகள், குழந்தைகளும் உயிரிழந்ததாகக் கூறினர்.

இந்த சம்பவம் இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலை அடுத்து, காசாமுனனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிக் ஜிகாத், ஹமாஸ்க் ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு இஸ்ரேல் படையினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

இப்படி, இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி சண்டையிட்டு வரும் நிலையில், இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரஷியா- உக்ரைன், சூடானில் உள்நாட்டுப் போர் ஆகியவற்றைத் தொடர்ந்து இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை  உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments