கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தகவல்..!

Webdunia
புதன், 10 மே 2023 (19:03 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 
 
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் பாஜக தான் அதிக இடத்தில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
பாஜக 94 முதல் 117 இடங்கள் வரை வெல்லும் என்றும் காங்கிரஸ் 91 முதல் 106 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 முதல் 24 தொகுதிகளில் வெல்லும் என்றும் மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் இரண்டு இடங்களில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
கருத்துக்கணிப்பை பார்க்கும் போது காங்கிரஸ் மற்றும் பாஜக கிட்டத்தட்ட சம இடங்களில் தான் வெல்லும் என்றும் பத்து தொகுதிகள்தான் இரு கட்சிகளுக்கு இடையே வேறுபாடு இருக்கும் என்பது தெரிய வருகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிறிஸ்துவ நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின்

5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.2500.. பேச்சுலர்கள் கடும் அதிர்ச்சி..!

கொல்கத்தா வரை தாக்குதல் நடத்துவோம்.. பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை.. இந்தியா ரியாக்சன் என்ன?

ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைதா? குடும்பத்தினர் சொல்வது என்ன?

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி: 'பணம் வேண்டாம், கார்டு வேண்டாம்' வியந்து போன ஜெர்மனி பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments