Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே தொடர் தாக்குதல்...போர் மூளும் அபாயம்

isrel- Palestine
, புதன், 10 மே 2023 (19:07 IST)
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம்   நேற்று  நடத்திய தாக்குதலில்  பாலஸ்தீன முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட  15  பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே  நீண்டகாலமாக பகை நிலவி வரும் நிலையில், அவ்வப்போது போரிட்டு வருகிறது.

கடந்த வாரம் பாலஷ்தீன உண்ணாவிரத போராட்ட  நடத்தி வந்த பிரபலம் காதர் அட்னன் மரணமடைந்தார். இதையடுத்து. அந்த நாட்டிலிருந்து , இஸ்ரேல் நாட்டை நோக்கி  ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் படையினர்   காரணமின்றி தன்னை கைது செய்யப்பட்டதாக கூறி காதர் அட்னன் 87 நாட்கள் வரை உண்ணாவிரத போராட்டம் இருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, இஸ்ரேல் மீது பாலஸ்தீன படை தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேல் படையினரும் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில், இன்று காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில்  15  பேர் பலியாகினர்.

இதுகுறித்து, பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் என்ற இயக்கம் கூறியதாவது: இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் தங்கள் 3 தலைவர்கள் ஜிகாத் அல் கன்னம், கலீல் அல்ம் பாதினி மற்றும் டாரிக் இஜ் அல் தீன் ஆகிய 3 பேர், அவர்களின் மனைவிகள், குழந்தைகளும் உயிரிழந்ததாகக் கூறினர்.

இந்த சம்பவம் இரு நாடுகளிடையே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இத்தாக்குதலை அடுத்து, காசாமுனனையில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்லாமிக் ஜிகாத், ஹமாஸ்க் ஆயுதக் குழுக்கள் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படும் நிலையில், இதற்கு இஸ்ரேல் படையினர் பதிலடி கொடுத்துள்ளனர்.

இப்படி, இருதரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி சண்டையிட்டு வரும் நிலையில், இரு நாடுகள் இடையே மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, ரஷியா- உக்ரைன், சூடானில் உள்நாட்டுப் போர் ஆகியவற்றைத் தொடர்ந்து இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை  உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தகவல்..!