Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைவானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை! – பீதியில் மக்கள்!

Prasanth Karthick
புதன், 3 ஏப்ரல் 2024 (09:38 IST)
தீவு நாடான தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ள நிலையில் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை ரிக்டர் அளவில் 72 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகரின் பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில், ரயில்களில் நிலநடுக்கத்தின்போது பதிவு செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பலர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் மேற்கு கடலோர பிராந்தியமான ஒகினாவாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கடந்த 1999ம் ஆண்டுக்கு பிறகு 25 ஆண்டுகளில் தைவானில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments