Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபோனை துப்பாக்கி என நினைத்து அப்பாவியை சுட்டுக் கொன்ற போலீஸார்

Webdunia
சனி, 24 மார்ச் 2018 (14:29 IST)
அமெரிக்காவில் ஸ்டீபன் கிளார்க் என்ற அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் சுட்டுக் கொன்ற சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சாக்ரமென்டோவில் வசித்து வந்தவர் ஸ்டீபன் கிளார்க். ஸ்டீபன் கிளார்க் கருப்பு இனத்தவர் ஆவார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஸ்டீபன் கிளார்க்கின் நடவடிக்கையின் மீது சந்தேகித்த போலீஸார், அவரை பிடிக்க முற்பட்டனர். இதனால் பயந்து போன ஸ்டீபன் தனது வீட்டின் பின் பக்கம் ஓடிச் சென்று பதுங்கினார். 
 
இந்நிலையில் ஸ்டீபனின் கையிலிருந்த ஐபோனை துப்பாக்கி என நினைத்த போலீஸார் ஸ்டீபனை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஸ்டீபன் சம்பவ இடத்திலே பரிதாபமாக் உயிரிழந்தார். இச்சம்பவம் கருப்பு இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அவர்கள் தற்பொழுது சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments