Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலந்தியை கொல்ல வீட்டை தீயிட்டு கொளுத்திய நபர்

Webdunia
புதன், 10 ஜனவரி 2018 (14:53 IST)
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் சிலந்தி பூச்சியை தீயிட்டு கொல்ல முயன்ற நபரின் வீடு முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியை சேர்ந்த ஒரு நபர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த நபரின் வீட்டில் மிகப்பெரிய சிலந்தி பூச்சி இருந்துள்ளது. இதனைப்பார்த்த அந்த நபர் சிலந்தியை அடித்து கொல்ல முயன்றார். அது தப்பித்துக் கொண்டே இருந்தது. எனவே பர்னர் மூலம் சிலந்தியை தீயிட்டு கொல்ல முயன்றார்.
 
அப்போது வீட்டில் மாட்டப்பட்டிருந்த ஸ்கிரீனில் எதிர்பாராதவிதமாக தீ பரவியது. பின்னர் தீ வீடு முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று முதல் 26ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு..!

இலங்கை சீதை கோயிலில் மகா கும்பாபிஷேகம்: இந்தியாவிலிருந்து சென்ற சீர்வரிசைகள்..!

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

அடுத்த கட்டுரையில்
Show comments