Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபர் அதிரடி கைது

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (08:13 IST)
பாரீஸில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
பிரான்ஸில் நபர் ஒருவர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வந்துள்ளார். அந்த சிங்கக்குட்டி பிறந்து 6 வாரங்களே ஆகிறது. அந்த நபர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வருவதையறிந்த பக்கத்து வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மீட்புத் துறையினர் உதவியோடு அந்த சிஙக்குட்டியை மீட்டனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் அந்த சிங்கக்குட்டியை 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சித்தது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். மேலும் அந்த சிங்கக்குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments