Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபர் அதிரடி கைது

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (08:13 IST)
பாரீஸில் வீட்டில் சிங்கக்குட்டியை வைத்திருந்த நபரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
 
பிரான்ஸில் நபர் ஒருவர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வந்துள்ளார். அந்த சிங்கக்குட்டி பிறந்து 6 வாரங்களே ஆகிறது. அந்த நபர் வீட்டில் சிங்கக்குட்டியை வளர்த்து வருவதையறிந்த பக்கத்து வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மீட்புத் துறையினர் உதவியோடு அந்த சிஙக்குட்டியை மீட்டனர். அந்த நபரிடம் விசாரித்ததில் அவர் அந்த சிங்கக்குட்டியை 11 ஆயிரம் டாலருக்கு (சுமார் ரூ.8 லட்சத்து 14 ஆயிரம்) விற்க முயற்சித்தது தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். மேலும் அந்த சிங்கக்குட்டியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments