Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ ஏம் வெரி வெரி சாரி!! லேப்டாப் திருடன் எழுதிய உருக்கமான கடிதம்

ஐ ஏம் வெரி வெரி சாரி!! லேப்டாப் திருடன் எழுதிய உருக்கமான கடிதம்
, வெள்ளி, 30 நவம்பர் 2018 (11:48 IST)
இங்கிலாந்தில் லேப்டாப் திருடன் ஒருவன் அந்த லேப்டாப்பின் ஓனருக்கு எழுதிய உருக்கமான கடிதம் வைரலாகி வருகிறது.
 
இங்கிலாந்தை சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் ஒரு பிளாட்டில் தங்கி இருக்கிறார்.
 
இந்நிலையில் அந்த நபரின் லேப்டாப்பை சமீபத்தில் யாரோ திருடிவிட்டனர். இதனால் அந்த நபர் கடும் அப்செட் ஆனார். அதில் தான் பல நாள் கஷ்டப்பட்டு ஒர்க் பண்ண பிராஜெக்டெல்லாம் இருக்கு, எனக்கூறி தன் நண்பரிடம் புலம்பியுள்ளார்.
 
இதற்கிடையே அந்த நபருக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில் ஹலோ ஐ ஏம் வெரி வெரி சாரி உங்கள் லேப்டாப்பை திருடிய திருடன் நான்தான். பணக்கஷ்டத்தால் உங்கள் லேப்டாப்பை திருடிவிட்டேன்.
webdunia
 
உங்களது லேப்டாப்பில் உள்ள விபரங்களைப் பார்த்தால் நீங்கள் பல்கலைக்கழகத்தில் படிப்பவர் போல இருக்கிறது. இதில் உள்ள ஃபைல்கள் எதாவது தேவைப்பட்டால் கூறுங்கள் நான் அதை அனுப்பி வைக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாக கூறியுள்ளார் அந்த திருடன். இது தற்பொழுது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவுக்கு புதிய அதிகாரி: தமிழக அரசு அறிவிப்பு