Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இருந்தால் மட்டுமே அனுமதி: பிரபல சுற்றுலாத்தளத்தின் வித்தியாசமான நிபந்தனை

Webdunia
ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (14:54 IST)
கொரோனா இருந்தால் மட்டுமே அனுமதி:
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டே வெளியே வரக்கூட அனுமதி இல்லை என்றும் தனிமைப்படுத்துதலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உலகம் முழுவதும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு சுற்றுலாதலம் திறக்கப்பட்டுள்ளது. அந்த சுற்றுலா தளத்திற்கு செல்ல வேண்டுமானால் கொரோனா பாசிட்டிவ் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது பிரேசில். இந்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை பாதிப்பை தவிர்ப்பதற்காக அங்கு உள்ள ஒரு சுற்றுலாதீவு  தற்போது திறக்கப்பட்டு உள்ளது 
 
ஆனால் இந்தத் தீவில் நுழைய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் இருக்கும் நோயாளிகள் இந்த தீவிற்கு வந்தால் புத்துணர்ச்சி பெறுவார்கள் என்ற நோக்கத்தில் இந்த தீவு திறக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த தீவுக்கு வருகை தருபவர்கள் கண்டிப்பாக கொரோனா பாசிட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் செய்திகள் வெளியாகி உள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments