Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய ஒளிப்பிழம்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (17:47 IST)
உக்ரைன் தலைநகரில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளிப்பிழம்பு காரணமாக அந்த பகுதி மக்கள் பதட்டம் அடைந்துள்ளனர்.
 
கடந்த ஒரு ஆண்டாக உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது கடும் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கீவ் என்ற நகரின் வான் பரப்பில் திடீரென பிரகாசமான ஒளி பிழம்பு தோன்றியது 
 
மேலும் மக்களை எச்சரிக்கும் வகையில் விமான தாக்குதலுக்கான சைரன்களும் ஒலிக்கப்பட்டதால் பொதுமக்கள் பதட்டம் அடைந்தனர். இருப்பினும் எந்த ஒரு தாக்குதலும் தலைநகரில் நடத்தப்படவில்லை என்று ராணுவம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
நாசாவின் செயல் இழந்த செயற்கைக்கோள் அல்லது விண்கல் வான் பரப்பில் எரிந்து விழுந்ததால் இந்த ஒளிப்பிழம்பு தோன்றி இருக்கலாம் என உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments