Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகளை கற்பழிக்க முயன்ற முதியவர் - மர்ம உறுப்பை கடித்துக் குதறிய நாய்

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (08:19 IST)
வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை கற்பழிக்க முயன்றவரின் மர்ம உறுப்பை வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அர்கானஸ் மாகானத்தில் ஜேம்ஸ் என்பவர் தனது மனைவி, 3 மற்றும் 6 வயது மகள்களுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி வேலைக்கு சென்று விட்டனர். அவர்களின் இரு பிள்ளைகளும் பள்ளி முடிந்து வீட்டில் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தனர்.
 
அப்போது அவர்களது வீட்டினுள் நுழைந்த முதியவர் ஒருவர் அந்த சிறுமிகளை கற்பழிக்க முயன்றுள்ளார். இதனால் பயந்துபோன சிறுமிகள் அலறினர். உடனடியாக வந்த அவர்களின் வளர்ப்பு நாய் அந்த முதியவரை கடுமையாக தாக்கியது. அவரின் மர்ம உறுப்பை கடித்துக் குதறியதோடு அதனை தின்றும்விட்டது.
 
இதனையடுத்து வலியால் துடித்த முதியவர் தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அந்த முதியவரை சிகிச்சைக்கு பின் கைது செய்ய உள்ளனர்.
 
சரியான நேரத்தில் எஜமானர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments