Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமான 15 நிமிடத்தில் மனைவியை விவாகரத்து செய்த கணவன்

Webdunia
சனி, 26 மே 2018 (09:59 IST)
துபாயில் மணமகன் ஒருவர் திருமணமான 15 நிமிடத்தில் மணமகளை விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயை சேர்ந்த நபர் ஒருவர், திருமணம் செய்ய முடிவு செய்து மணமகளை தேடி வந்தார்.
 
இந்நிலையில் அந்த நபர், ஒரு பெண்ணின் தந்தையிடம் 20,000 பவுண்ட்ஸ் கொடுத்து உங்களது மகளை திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்ணின்  தந்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
 
இதனையடுத்து அனைவரது முன்னிலையிலும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடனேயே பணத்தை தருமாறு மணமகளின் தந்தை கேட்டுள்ளார். ஆனால் மணமகன் 10,000 பவுண்ட்ஸ் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த மணப்பெண்ணின் தந்தை அனைவரது முன்னிலையிலும் மணமகனை திட்டியுள்ளார்.
 
இந்த சம்பவத்தால் தனக்கு அவமானம் நேர்ந்துவிட்டதாக கூறி, மணமகன் திருமணமான 15 நிமிடத்திலேயே தலாக் சொல்லி மணமகளை விவாகரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments