Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் உயரமான கட்டிடத்தில் அசால்ட்டாக ஏறிய இளைஞர்! – அதிர்ச்சியடைந்த போலீஸ்!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (08:40 IST)
உலகின் உயரமான தென்கொரிய கட்டிடம் ஒன்றில் இளைஞர் ஒருவர் வெறும் கைகளால் ஏறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உலகில் பல உயரமான கட்டிடங்கள் உள்ள நிலையில் அவற்றில் ஏறுவதை பலர் சாகசமாக செய்து வருகின்றனர். ஸ்கை ஸ்க்ரேப்பர் எனப்படும் இவ்வாறான உயர்ந்த கட்டிடங்களில் ஏறவும், நடுவே கயிறு போட்டு நடக்கவும் முறையான அனுமதி பெறுவதுடன், நிறைய பாதுகாப்பு வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

ஆனால் சில சாகச விரும்பிகள் இந்த ரூல்ஸை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் சாகசம் செய்ய முயன்று சிக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அவ்வபோது நடக்கின்றன. உலகின் மிக உயரமான ஸ்கை ஸ்க்ரேப்பர் கட்டிடங்களில் 5வது இடத்தில் உள்ள கட்டிடம் 123 அடுக்குகளை கொண்ட தென்கொரியாவின் லொட்டே வோர்ல்ட் டவர்.

சமீபத்தில் தென்கொரியா சென்ற பிரிட்டிஷ் நபர் ஒருவர் திடீரென இந்த கட்டிடத்தின் சுவர்களில் வேகமாக ஏறத் தொடங்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியுள்ளனர். காவல்துறையினர் எச்சரித்தும் அவர் பொருட்படுத்தாமல் ஏற தொடங்கியுள்ளார். பாதுகாப்பிற்கு கயிறு உள்ளிட்ட எந்த சாதனமும் இல்லாமல் வெறும் கைகளால் அவர் தொடர்ந்து கட்டிடத்தில் ஏறியது பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

வேகவேகமாக ஏறி 73வது தளத்தில் சென்று கொண்டிருந்த அந்த நபரை போலீஸார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் பிரிட்டனை சேர்ந்த 23 வயதான ஜார்ஜ் கிங் தாம்சன் என தெரியவந்துள்ளது. வெறும் கைகளால் சிலந்தி மனிதன் போல கட்டிடத்தில் ஏறி தாம்சன் அதிர்ச்சியை ஏற்படுத்துவது இது முதல்முறை இல்லையாம். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு லண்டனில் உள்ள ஷார்ட் கட்டிடத்தில் இப்படி வெறும் கைகளால் ஏறி கைதானவர்தான் தாம்சன் என தெரிய வந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments