பிச்சைக்கார பாட்டியின் வங்கி கணக்கில் 7 கோடி!

Webdunia
திங்கள், 21 மே 2018 (16:36 IST)
பிச்சைக்கார பாட்டி ஒருவரின் வங்கி கணக்கில் ஏழு கோடி ரூபாயும், அவரது பையில் இரண்டு லட்ச ரூபாயும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் வீதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த கால் இல்லாத பாட்டி ஒருவர் சாலையோரத்தில் இறந்துகிடந்தார். 
 
அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது பையை சோதனை செய்தபோது, அவரது பையில் இந்திய மதிப்பில் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு பல லெபனான் நாட்டு ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தார். 
 
மேலும், அவரது வங்கிக் கணக்கு புத்தகமும் சிக்கியது. அதில், ஏழரை கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அந்த பாட்டியின் பெயர் பாத்திமா ஆத்மன். அவருக்கு வயது 54 என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

ராகுல் காந்தி தான் பிரதமர் மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய பலம்.. பிஆர்எஸ் கட்சி விமர்சனம்..!

டிக்கெட் கவுன்ட்டர்களில் தட்கல் முன்பதிவு செய்தாலும் ஓடிபி கட்டாயம்: புதிய நடைமுறை அறிமுகம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 இந்து அமைப்பினர் கைது

முற்றிலும் வலு குறைந்தது டிட்வா புயல்.. சென்னையில் இன்று வெயில் அடித்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments