Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் - அமித்ஷா பேட்டி

Webdunia
திங்கள், 21 மே 2018 (16:28 IST)
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கே உரிமை உள்ளது எனவும், காங்கிரஸ்-மஜத கூட்டணியை மக்கள் ஆதரிக்கவில்லை என்றும் பாஜக தேசிய செயலாளர் அமித்ஷா கூறியுள்ளார்.

 
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னரே ராஜினாமா செய்துவிட்ட நிலையில்  கர்நாடக கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி. இதனையடுத்து வரும் புதன்கிழமை கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார்.
 
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமித்ஷா “கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி செயல்பட்டது. தவறான வாக்குறுதிகளை அளித்தது. ஆனாலும், மக்கள் தோல்வியை கொடுத்தனர். ஆனாலும், காங்கிரஸ் கட்சி தோல்வியை கொண்டாடி வருகிறது. சாதி, மத அடிப்படையில் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. பாஜக மீது நம்பிக்கை வைத்துதான், கர்நாடக மக்கள் அதிக இடங்களை அளித்தனர். 
 
எனவே, ஆட்சி அமைக்க பாஜகவிற்கே முதல் உரிமை உள்ளது. காங்கிரஸ் கட்சிகள் ஏராளமான ஊழல் நடந்தது. அதனால்தான் அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மஜத-காங்கிரஸ் கூட்டணியை கர்நாடக மக்கள் விரும்பவில்லை. அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments