Publish Date: Sat, 29 Feb 2020 (19:36 IST)
Updated Date: Sat, 29 Feb 2020 (19:41 IST)
ஈரான் நாட்டில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸால் இது வரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில் ஈரானில் நேற்று வரை கொரோனாவால் 26 பேர் பலியான நிலையில், இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது.