Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூட்டம் கூட்டமாக இறந்து ஒதுங்கும் திமிங்கலங்கள்! – அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா!

Advertiesment
World
, புதன், 23 செப்டம்பர் 2020 (14:37 IST)
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய கடல்பகுதியில் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக இறந்து கரை ஒதுங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திமிங்கலங்கள் நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கி வருகின்றன. அவற்றை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் பலர் அவற்றை படகுகள் மூலம் மீண்டும் கடலுக்குள் கொண்டு விடுவது, தண்ணீரை மேலே ஊற்றி ஈரப்பதத்துடன் வைத்திருப்பது போன்ற பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் 470க்கும் அதிகமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் அவை கரை ஒதுங்கியதற்கான காரணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சரின் உதவியாளர் கத்தி முனையில் கடத்தல்! – திருப்பூரில் பரபரப்பு