Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:43 IST)
லிபியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் கலவரத்தை ஏற்படுத்திவிட்டு சிறையிலிருந்து தப்பித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிபியாவில் தீவிரவாதிகளால் பொதுமக்களுக்கு தொடர் அச்சுறுத்தல்கள் இருந்து வருகிறது. கடந்த வாரம் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதலில் 47 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் இருந்து வருகிறது.
 
இந்நிலையில் லிபியாவில் அப்பன் ஜாரா என்ற சிறையில் உள்ள கைதிகள் அங்கு கலவரத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிவிட்டனர். 400 கைதிகள் தப்பியோடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கைதிகளின் தாக்குதலுக்கு பயந்து அவர்கள் தப்பியோடியபோது காவலர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை. 400 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடிய சம்பவம் லிபியாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments