Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’லாரியில் 39 உடல்கள் ’கண்டெடுப்பு... போலீஸார் அதிர்ச்சி ! மக்கள் பீதி !

Webdunia
புதன், 23 அக்டோபர் 2019 (16:38 IST)
இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள ஒரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டர் நகரின் கிழக்கு பகுதியில் கிரேஸ் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் போலீஸார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே ஒரு லாரி வந்துள்ளது.
 
அதை நிறுத்திய போலீஸார் அதை சோதனை செய்தனர். அப்போது  உள்ளே துர்நாற்றம் அடிக்கும் வகையில் 39 மனித உடல்கள் இருந்ததைப் பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்.
 
அந்த லாரியை ஓட்டி வந்த 25 வயது ஓட்டுநரை கைது செய்துள்ள லண்டன் போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
தற்போது, இறந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் பல அதிர்ச்சியூட்டும் முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என அந்நாட்டு பத்திரிக்கைகள் தகவல் தெரிவித்துவருகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments