Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகி உட்பட 3 இளம்பெண்கள் ஓட ஓட விரட்டிக் கொலை!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (15:06 IST)
ஈக்வடார் நாட்டில் குயினேட் கடற்கரையில் 3 இளம்பெண்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஈக்வடார் நாட்டின் குயினேட் கடற்கரைக்கு மீனவர்கள் வந்தனர். அவர்களின் நாய் ஒன்று அங்கு கடற்கரை ஓரத்தில் இருந்த பகுதியைத் தோண்டி 3 இளம்பெண்களின் சடலத்தைக் கண்டுபிடித்தது.

இதுகுறித்த அவர்கள் போலீஸுக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் 3 பெண்களின் சடலங்களைக் கைப்பற்றி பிரேசத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

சில நாட்களுக்கு முன்  இந்தக் கடற்கரையில் உல்லாசப் பயணம் மேற்கொள்ள வந்த 3 இளம்பெண்களை சில ரவுடிகள் துரைத்தியுள்ளனர். இதனால் பயந்த பெண்கள் தங்கள் தோழிக்கு சமூக வலைதளம் மூலம் தகவளித்தனர்.

கடைசியில் 3 பேரும் அடையாளம் தெரியாத  நபர்களா கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டனர்.

இந்த 3 பெண்களில் ஒருவர் நயேலி, இவர் ஒரு பாடகர் மற்றும் திருமணம் ஆனவர் ஆவார்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments