Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பரிதாப பலி

Advertiesment
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 3 பேர் பரிதாப பலி
, செவ்வாய், 20 நவம்பர் 2018 (14:09 IST)
அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் மெர்சி என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு பதுங்கி இருந்த ஒருவன் தீடீரென தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் மருத்துவமனைக்கு வருவோர் போவோர் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் ஒரு டாக்டர் உட்பட  பேர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியை பிடிக்க முயன்றனர். அப்போது அவன் மீண்டும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தான். இதில் ஒரு போலீஸ் அதிகாரி பலியானார்.
 
இந்நிலையில் அந்த குற்றவாளி என்ன ஆனார் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால் மருத்துவமனையில் சுடப்பட்டு உயிரிழந்த டாக்டர் குற்றவாளியின் முன்னாள் காதலி என்று செய்திகள் பரவி வருகிறது.
 
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவனை பின்னிப் பெடலெடுத்த ஆசிரியர் ! அதற்கு கூலி கொடுத்த பெற்றோர்...