கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழப்பு.. ஆராய்ச்சியாளர் கூறும் காரணம் என்ன?

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (13:29 IST)
ஆஸ்திரேலியாவின் தென் மேற்கு பகுதியில், கரை ஒதுங்கிய 26 பைலட் திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இதுகுறித்து கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்து வருகின்றனர்.
 
ஆஸ்திரேலியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள டோபி இன்லெட் என்னும் பகுதியில் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாகவும், அதில்  26 திமிங்கலங்கள் கரையில் மூச்சுவிட முடியாமல் இறந்துவிட்டன என்றும் இன்னும் பல திமிங்கலங்கள்  ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
மீதமுள்ள திமிங்கலங்களை மீட்டு, கடலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், இதில் தன்னார்வலர்கள், கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.
 
ஒரு திமிங்கலம் கரையில் மாட்டிக்கொண்ட நிலையில், மற்ற திமிங்கலமும் வரிசையாக வந்து சிக்கியிருக்கலாம் என அந்நாட்டு, கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் இந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments