Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை நோய்க்கு 2 பேர் பலி: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:52 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்கூட 3 பேர் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரண்டாவது நபர் அங்கு உயிரிழந்தார் என ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உயிரிழந்தவர் குறித்த எந்தவித அடையாளத்தையும் ஸ்பெயின் அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது ஸ்பெயின் நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பலியாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காமெடி நடிகரின் வேட்புமனு நிராகரிப்பு..!

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. மருத்துவ கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை..!

செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments