Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை நோய்க்கு 2 பேர் பலி: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:52 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில்கூட 3 பேர் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயின், பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன. குறிப்பாக ஸ்பெயின் நாட்டில் குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று இரண்டாவது நபர் அங்கு உயிரிழந்தார் என ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் உயிரிழந்தவர் குறித்த எந்தவித அடையாளத்தையும் ஸ்பெயின் அரசு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது ஸ்பெயின் நாட்டில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 4 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பலியாகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ் குறித்து சர்ச்சை கேள்வி.. வினாத்தாள் தயாரித்த பேராசிரியருக்கு வாழ்நாள் தடை..!

கோழியை காப்பாற்றி முதலையை ஏப்பம் விட்ட ஆனந்த் அம்பானி? - கலாய்க்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தை விற்பனை! 11 பேரை டிக்கெட்டும் கையுமாக கைது செய்த போலீஸ்!

Rain alert: கோடையை குளிர்விக்கும் மழை.. இன்று 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments