Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னணி நடிகரின் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து... ஒருவர் பலி

Advertiesment
aliabutt
, சனி, 30 ஜூலை 2022 (17:00 IST)
இந்தி சினிமாவில் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர்  நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  இப்படத்தின் ஷூட்டிங் மும்பை நகரில் உள்ள அந்தேரி பகுதியில் சித்ரகூட் படப்பிடிப்பு தளத்தில்  நடந்து வரும்  நிலையில்,  நேற்று இப்படப்பிடிப்பு தளத்தில், திடீரென்று கரும்புகை பரவியது.

இந்த தீ விபத்தில் சிக்கிய ஒரு இளைஞரை மருத்துவமனைக்கு  கொண்டு வரும் வழியில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

ரன்பீர் மற்றும் ஷ்ரத்தா கபூர் சமீபத்தில் வெளி நாட்டில் ஷூட்டிங் முடித்துவிட்டு இங்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த     நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வணங்கான் படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்… சிம்பு பட இயக்குனர் புகார்!