Publish Date: Fri, 08 Jun 2018 (16:51 IST)
Updated Date: Fri, 08 Jun 2018 (16:56 IST)
சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 போராளிகள் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் ஜிஹாதி குழுவினர் அந்நாட்டு அதிபர் அல் அசாத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி, அங்குள்ள பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டுகள் வைத்துள்ளனர். இதனால் அரசுக்கும், ஜிஹாதி குழுவினருக்கும் அடிக்கடி போராட்டம் நடைபெறும்.
இதேபோல் அரசு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகளும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக போராடி வருகிறது.
இந்நிலையில், நேற்று திடீரென ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவின் தென் பகுதியில் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த 17 போராளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.