48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

Prasanth Karthick
புதன், 21 மே 2025 (08:27 IST)

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது. சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு மக்கள் பலர் காசா திரும்பிய நிலையில் மீண்டும் போர் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரில் இஸ்ரேல் ராணுவத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.

 

மேலும் காசாவை முழுவதும் தாக்கி வரும் இஸ்ரேல், அங்குள்ள பெண்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகளையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்துள்ளது. இதனால் மக்கள் பசி, பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 20 லட்சம் பேர் காசாவில் பசி, பட்டினியில் தவிப்பதாக தெரிவித்துள்ளது. 11 வாரங்களில் பசி, பட்டினியால் 57 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் பல ஆயிரம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கும் சூழல் உள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments