Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1200 கைதிகள் எஸ்கேப் - அதிர்ச்சியில் சிறைத் துறை அதிகாரிகள்

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (10:21 IST)
இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 1200 கைதிகள் சிறையில் இருந்து தப்பித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது.
இந்தோனேஷியாவில் 7.5 ரிக்டர் அளவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 5 அடி உயரத்தில் பயங்கர ஆக்ரோஷத்துடன் சுனாமி தாக்கியது. இதனால் பல கட்டிடங்களும், கார்களும் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டது. 
 
கடற்கரை திருவிழாவில் பங்கேற்ற ஏராளமான மக்கள் சுனாமியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தை பயன்படுத்தி நகரெங்கிலும் இருந்த் 3 சிறைகளிலிருந்த 1200 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிலர் தப்பிச் செல்லாமல் சிறையிலே இருந்துள்ளனர்.
 
இதுகுறித்து பேசிய இந்தோனேஷிய சிறைத்துறை அதிகாரி ஒருவர், தப்பித்தோடிய அனைவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments