Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போதையில் கார் ஓட்டி வந்த 12 வயது சிறுமி : பயங்கர விபத்து ...அதிர்ச்சியடைந்த போலீசார்!

போதையில் கார் ஓட்டி வந்த 12 வயது சிறுமி : பயங்கர விபத்து ...அதிர்ச்சியடைந்த போலீசார்!
, திங்கள், 23 செப்டம்பர் 2019 (21:12 IST)
அமெரிக்க நாட்டில், 4 சிறுமிகள் மது அருந்திவிட்டு கார் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் உள்ள நியூமெக்ஸிகோ என்ற மாகாணம் உள்ளது., இங்கு, சாலையில் ஒரு கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த அதை நிறுத்தச் சொல்லியும் நிற்காமல் சென்றுள்ளது. அந்தக் காரைப்  பின் தொடந்து போலீஸார் சென்றுள்ளனர்.
 
அப்போது, அந்தக் கார் இரு வாகனங்கள் மீது நின்றுள்ளது. பின்னர் விரைந்து சென்ற போலிஸார் காரில் உள்ளவர்களைப் பார்த்தனர். அதில், 12 சிறுமி ஒருவர் மற்றும் 3 சிறுமிகள் போதையில் இருந்ததைப் பார்த்து போலீஸார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனையடுத்து போலீஸார்  4 சிறுமிகளையும் கைது செய்து, அவர்களிடன் விசாரணை நடத்தினர். அதில், காரை ஒட்டி வந்த சிறுமி, தனது தாத்தா காரை திருடி ஓட்டி வந்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர். சிறுமிகள் கார் மதுகுடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் நடிக்கும் அவதாரம் எடுத்த துணை முதல்வர் !