Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகம் முழுவதும் கொரோனாவால் 11 லட்சம் பேர் பாதிப்பு…அதிர்ச்சி தகவல்

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (15:10 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வரும் 14 ஆம்தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை11,19,993 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 59,247 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தைக் காண்போம்.
இத்தாலியில்1,19,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரத்து 861 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கொரோனா தொற்றினால், 2 மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சீனாவில் மட்டும் 83 ஆயிரத்து 639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 326 பேர் பலியாகியுள்ளனர்.

கொரொனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,77,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7403 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1480 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 3082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 86 பேர் பலியாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments