Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை: ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது..!

Webdunia
சனி, 8 ஏப்ரல் 2023 (12:00 IST)
மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த 10 போலி டாக்டர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவாரூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஒரே நாளில் பத்து மருத்துவர்கள் மருத்துவம் படிக்காமலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இதனை அடுத்து 10 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைத்தனர். மருத்துவம் படிக்காமல் உரிய மருத்துவ லைசென்ஸ் இல்லாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்
 
 மேலும் இதுபோன்ற போலி மருத்துவர்களை பார்த்தால் போலீசாரிடம் உடனடியாக பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments