Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லையில் 1 லட்சம் ராணுவ வீரர்கள்; காசா மீது படையெடுக்கும் இஸ்ரேல்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (15:27 IST)
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில் ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா மீது போரை தொடர்ந்துள்ளது இஸ்ரேல்.



இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் காசாவை கட்டுப்படுத்தி வரும் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் சுமார் 5000 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி பெரும் போரை தொடங்கியுள்ளது.

பதிலடியாக இஸ்ரேலும் வான்வழி தாக்குதலில் இறங்கிய நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இந்த போரில் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான், சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆயுதங்களை தருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசா – இஸ்ரேல் எல்லையில் சுமார் 1 லட்சம் ராணுவ வீரர்களை குவித்துள்ளது இஸ்ரேல். காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், ட்ரோட் ஆகிய 3 நகரங்களில் ஏற்கனவே ஹமாஸ் – இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகிறது. இதில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் காயம்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments