Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’போர் தொடங்கியாச்சு!’ சூளுரைத்த அயதுல்லா கமேனி! பாய்ந்தது ஹைபர் சோனிக் ஏவுகணை! Video

Prasanth K
புதன், 18 ஜூன் 2025 (10:28 IST)

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் தற்போது ஈரான் தனது முதல் ஹைபர் சோனிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

 

ஈரானின் அணு ஆயுத பரிசோதனைகளுக்கு எதிர்ப்பு இருந்து வரும் நிலையில் இஸ்ரேல் விமானப்படை சமீபத்தில் ஈரானுக்குள் புகுந்து ஈரானிய அணு ஆய்வகங்களை தாக்கி அழித்தது. இதற்கு பதிலடியாக டெல் அவிவ் நகரை ஈரான் தாக்க, பதிலுக்கு தெஹ்ரானை இஸ்ரேல் தாக்க, இரு நாடுகளிடையே போர் தீவிரமடைந்துள்ளது.

 

இந்நிலையில் நேற்று தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் உயர்மட்ட ராணுவ தளபதி அலி ஷமாத்னி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியானது. இவர் ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனியின் நண்பர் என்றும் சொல்லப்பட்டது.

 

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் தற்போது இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஃபத்தா 1 என்ற தங்களது ஹைபர் சோனிக் ஏவுகணையை வீசித் தாக்கியுள்ளது ஈரான். இதில் கட்டிடங்கள் சில இடிந்ததுடன், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்து கிடக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

இந்த தாக்குதலை தொடர்ந்து பேசிய ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி “போர் தொடங்கிவிட்டது. ஸியோனிஸ்டுகளுடன் சமரச பேச்சுக்கு இடமே கிடையாது” என சூளுரைத்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? ஈரானுக்கு மட்டும் எதிர்ப்பு நிலவுவது ஏன்?

ஜூலை5ல் உலகம் அழியப்போகிறதா? .. பெண் சாமியார் கணிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி.!

ஈரான் மதகுரு இருக்கும் இடம் எங்களுக்கு தெரியும்.. ஆனால் கொல்லப்போவதில்லை: டிரம்ப்

நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்களில் ஐடி ரெய்டு.. கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள்..!

தந்தையின் பீடி பழக்கத்தால் பறிபோன பிஞ்சு உயிர்! ஆவேசமான தாய் செய்த செயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments