Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களே நம் நாட்டின் கண்கள்....

Webdunia
சனி, 6 மார்ச் 2021 (18:10 IST)
பெண்கள் தாயாக, மனைவியாக, மகளாக உறவுகளுக்கிடையே நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். எனினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும்  பலவிதமான ஒடுக்குமுறை வன்முறைகள் போன்றவை இன்றும் நம் மக்களிடையே நிரம்பியுள்ளதை நம்மால் மறுக்க இயலாது. 
சமூகப் போராட்டங்கள் மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் மிளிர்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், குடும்ப பொறுப்புகளை வெற்றிகரமாக மேற்கொண்டு  நடத்திட்ட, நடத்திக்கொண்டிருக்கிற பெண்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் வகையில் இந்நாளை நாம் கொண்டாடுகிறோம்.
 
பெண்களை இயற்கை சக்தி என்றே சொல்லலாம். ஏனெனில் ஒரு பெண்ணால் எந்த ஒரு சூழலையும் தன் அன்பு மழையால் செழிக்க செய்யவும் முடியும். அதே  பெண்கள் கோப புயலாய் மாறி சுழற்றி எடுக்கவும் முடியும். கருணையின் நிழலில் வாழ வைக்கவும் முடியும். பெண் இயற்கை சக்தியை ஒத்த குணாதிசயங்கள்  கொண்ட ஒரு ஒப்பற்ற பிறவி என்பதை நாம் உணர்ந்திருப்போம்.
 
உலகமே இவர்களால் இயங்கினாலும், இவர்களுக்கு எதிரான வன்முறை இன்றும் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பது தான் வேதனை. இப்படி பல்வேறு பரிணாமங்களை பெற்ற பெண்ணின் சிறப்பு விவரிக்க இயலாது. உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள் ஆவாள்.
 
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை களைந்து பாலின சமத்துவத்தை நிலைநிறுத்துவது அதன் நோக்கம். அதே நேரத்தில் சமூகம்,  பொருளாதாரம், கலாசாரம், அரசியல் ஆகிய துறைகளில் பெண்கள் அடைந்துள்ள சாதனைகளை இன்றைய தினம் கொண்டாடுகிறது. பெண்களை போற்றாத வீடும்  நாடும் வீணே என்பதே சத்தியமான உண்மை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்? அசத்தல் தகவல்கள்..!

மண்டையோடு மற்றும் உச்சந்தலை மறுசீரமைப்புடன் அரிதான தோல் புற்றுக் கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

மல்லிகைப்பூவின் மருத்துவப் பயன்கள்: அழகு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் உதவும்!

அடுத்த கட்டுரையில்
Show comments